மலேசியத் தமிழ்ச் சங்கம் உருவாகிப் பன்னிரண்டு வருடங்களாகின்றன. அது தலைநகர் கோலா லம்பூரில் ஒரு பெறுமதி மிக்க கட்டிடத்தை அண்மையில் கொள்வனவு செய்திருக்கிறது. இலவச கணினிக் கல்வி வழங்குவதற்கும் பொதுக் கல்வி வழங்குவதற்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மலேசியத் தமிழர்களின் மாறுபட்ட கலாச்சாரம் நன்னெறிக் கூறுகள், தேசப்பற்று, மொழிப்பற்று ஆகியவை உலகறிந்த விடயங்கள் அரிய நூல்கள் பலவற்றைச் சேகரித்து யாழ் நூலகம் போன்ற களஞ்சியத்தை உருவாக்கத் திட்டமிடப் பட்டுள்ளதாக தமிழ்ச் சங்கத் தலைவர் புலவர் கவிச்சுடர் காரைக்கிழார் தெரிவிக்கிறார்.



