புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன ? பாகம் – 03

அங்கு சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்ட பெண்களும் பெண் போராளிகளும் பட்ட இன்னல்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. தமிழ் மரபுக்கும், பண்பாட்டிற்கும் ஏற்ற வகையில் தம்மைப் பாதுகாத்து வந்த பெண்களினது கலச்சார வாழ்க்கைக்கு எந்த வித பங்கமும் வராது அதைத் தட்டிக் கொடுத்து அதில் தீவிரம் காட்டி வந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பக்குவமாகவும், பண்பாகவும் வழக்கப்பட்ட எம் இனப் பெண்கள் எந்த வித வசதிகள் இன்றி பல இன்னல்களைச் சந்தித்தார்கள்.

300 சதுர கிலோ மீற்றரிக்கும் குறைவான அப்பிரதேசத்தில் 2000 – 3000 ஆண்களுடன் 1000 திற்கும் மேற்பட்ட பெண்களை இரண்டு, மூன்று நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டு 10 – 15 மலசலக் கூடங்களில் சிலது பழுதான நிலையிலும். ஆண்களுடன் அதை பல சிரமங்களுக்கும் மத்தியிலும் பயன்படுத்த வேண்டிய அவலத்தை பெண்களுக்கு ஏற்படுத்தினான்.

ஓரேயொரு கிணறு மாத்திரம் அதில் தான் எல்லாத் தேவைகளுக்கும் நீர் எடுக்க வேண்டும் ஆண்களும், பெண்களும் குழிப்பதற்கு ஒரு கப்பி மட்டும் போடப்பட்டிருந்தது. குழிப்பதற்கோ உடைமாற்றுவற்கோ எந்தவித மறைப்பும் இல்லை. என்றாலும் எம் பெண்கள் தாங்கள் போட்டிருந்த உடைகளுடன் குழித்து தங்கள் தோழிகளின் மறைப்பை வேலியாக பயன்படுத்தி உடைமாற்றி தம் தேவைகளை பெரும் கஸ்ரத்தின் மத்தியிலும் நிறைவேற்றினார்கள்.

இராணுவத்தினரும், இராணுவப் புலனாய்வாளர்களும், ஒட்டுக்குளுக்களும் யாரை தன் இச்சைக்குப் பயன்படுத்தலாம் என்று தன் கழுகுக் கண்ணால் பார்த்த வண்ணம் தமது போன் கமராக்களில் படம்பிடித்தபடி திரிந்தார்கள். இந்நிலையில் பெண்கள் அக் கிணற்றைப் பயன்படுத்துவதில் அச்சம் அடைந்தார்கள் ஏனெனில் கிணற்றடியைச் சுற்றி பல இராணுவத்தினர்கள் கதிரைகளை போட்டபடி மது அருந்திக்கொண்டும் சிகரட் பற்றவைத்துக் கொண்டும் இருப்பார்கள்.

இவற்றை யெல்லாம் சமாளித்து எச்சூழலிலும் தம்மை அசுவாசப் படுத்திக் கொள்ளும் பெண்கள் தங்களையும் தம் மானத்தையும் பாதுகாத்துக்கொண்ட விதம் தமிழ்ப் பெண்கள் எவ்வளவு கௌரவமான மானமுள்ளவர்கள் என்பதுடன் தழிழ் பெண்களையும் தமிழ் இனத்தையும் பெருமைப்படுத்தினார்கள்.

இந்த இடத்தில் தமிழீழ தேசியத்தலைவரை நினைத்து பெருமைப்பட்டடோம். ஆனால் சரியாக கவலைப்பட்டோம். அதற்காக அவர்கள் பட்ட இன்னல்கள் அதிகம் அவர்களை அவதூரான வார்த்தைகளால் பேசிய போதும். தேவையற்ற கதைகள் கதைத்தபோதும் அதை தாங்கிக்கொள்ளாது பல பெண்கள் அழுத காட்சி இன்றும் எம் மனக் கண்முன்னே வருகிறது.

அவர்கள் எமக்கான பதிவுகளை முடிப்பதற்கா மூன்று தொடக்கம் நான்கு நாட்கள் அங்கேயே தடுத்து வைத்திருந்தார்கள். இங்கே எமக்கான பதிவுகளாக எமது குடும்ப விபரம், எமது படையணி தொடர்பான செயற்பாடு, எம்மைப் புகைப்படம் பிடித்தல் என்பன நடைபெற்றது.

பதிவுகள் முடிவடைந்தோர் பஸ்களில் ஏற்றப்பட்டு வவுனியாவில் உள்ள எமது தமிழ் மாணவர்களின் பாடசாலைகளை பறிமுதல் செய்து அதை தற்காலிக புனர்வாழ்வு முகாம் என்ற போர்வையில் வதைமுகாமாக்கி அங்கே கொண்டு சென்று இறக்கினார்கள்.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களும் சில போராளிகளும் தமது உடல் சோர்வாலும் அடுத்தது என்ன என்ற சிந்தனையிலும் வரிசையில் நின்று கஸ்டப்பட்டு பதிவதை விட ஆறதலாக பதிவோம் என்று அவனது அடி உதைகளுக்கு மத்தியிலும் மறைவாக படுத்துறங்கி தங்கள் களைப்பை போக்கினார்கள். அவ்வாறு இருந்த நாங்கள் இறுதிப் பதிவுக்குள் வந்தோம்.

அவ்வாறு பதியப்பட்டவர்கள் வேறு கோணத்தில் பார்க்கப்பட்டார்கள் அதாவது இவர்கள் தான் இறுதிவரை தங்களோடு நின்று சண்டை பிடித்தவர்கள். இவர்கள் ஆபத்தான புலிகள் என்று சொன்னான் எங்களால் என்னசெய்ய முடியும். ஆனால் நின்றவர்கள் போராளிகள் மட்டும் மல்ல நாளாந்த பணியாளர்கள், உதவி செய்தவர்களும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டோர். மக்கள் படையென தற்காப்பு பயிற்சி எடுத்த அறுபது வயதிற்கு மேற்பட்டோரும் நின்றார்கள்.

அப்போது அங்கே வந்த சில இராணுவத்தினர் எம்மை அழைத்து சென்று மக்கள் இருந்த இடம், நாங்கள் இருந்த இடம் இராணுவத்தின் தங்குமிடம் எல்லாம் துப்பரவு செய்யும்படி சொன்னான். ஆனால் எமக்கு துப்பரவாக்கும் பொருள் எதுவும் தரப்படவில்லை. கைகளால் தான் அள்ளினோம் இரண்டு மூன்று நாட்களாக பெய்த மழையில் சாப்பிட்டு மிகுதியாக போடப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் புளுப்பிடித்த நிலையில் அவற்றை வெறுங்கைகளால் அள்ளினோம். மலசல கூட வசதியில்லாதனால் வெளியிடங்களில் இருந்த மலங்களை எம்மை கைகளால் அள்ளச் சென்னான். நாம் பேப்பரின் உதவிகொண்டு கைகளால் அள்ளினோம். நாம் அள்ளும் போதும் உதுக்கத்தானே அங்கு இருந்த நீங்கள் இப்ப அள்ளுங்கோ என்று கொச்சத் தமிழில் சொல்லிச் சிரித்தான்.

இவ்வாறு இராணுவத்தினரதும் ஒட்டுக்குழுக்களினதும் உடல்ரீதியான துன்புறுத்தல்களையும் உள ரீதியான துன்புறுத்தல்களையும் தாங்கிக் கொண்டு எமது பதிவுகளை ஒரு வாறு முடித்துக்கொண்டோம். அதன் பின் எம்மையும் பஸ்களில் ஏற்றிக் கொண்டு ஒமந்தை மத்திய கல்லூரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கே புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் எங்களுக்கான வதை முகாம் ஆரம்பமானது. .

தொடரும்.

தொடர்புகளுக்கு – eelampress@gmail.com, epress83@yahoo.com

சோபி, ஆசிரியர் குழு,
www.eelampress.com

பாகம் – 02

http://www.eelampress.com/2011/01/11485/

பாகம் – 01

http://www.eelampress.com/2011/01/11005/

Comments are closed.